#drone #funny #catgif #broken #lost #hilarious #good #red #blue #nono #why #yes #yesyes #aliens #green
#broken #lost #good #red #funny #hilarious #catgif #blue #nono #why #yes #yesyes #aliens #green #drone
மக்கள் பாதை இயக்கத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து நாகல் சாமி நீக்கம். புதிய தலைவராக திரு.நாசர் நியமனம்.
பிஹாரில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆளுநர் மாளிகைக்கு படையெடுத்த விவசாயிகள்
''அரசியல் களத்தில் இருந்து விலகி விட்டேன்; நான் போகிறேன்; வரமாட்டேன்'' - தமிழருவி மணியன் அறிவிப்பு
டிரைவர் இல்லாமல் இயங்கும் ரயில் சேவை -கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
"மனஉளைச்சலில் இளையராஜா" : பிரசாத் ஸ்டூடியோ வருகை ரத்து!
முதல்வர்-முருகன் இன்று சந்திப்பு: முதல்வர் வேட்பாளர் குறித்து ஆலோசனையா?
அம்மா உணவகம் பாணியில் டெல்லியில் ரூ.1-க்கு உணவு: பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் தொடக்கம்
வேளாண் சட்டத்தில் எந்தக் காலத்திலும் துளி அளவு கூட மாற்றம் செய்ய மத்திய அரசு முன்வராது - அண்ணாமலை
சுப.வீரபாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதி!
அடிக்கிற அடியில் விஜய்-க்கும்.. சீமானின் பேச்சால் ரசிகர்கள் கொந்தளிப்பு.. குவியும் போஸ்டர்கள் !
பெரிய ஐபிஎல் ஏலத்துக்கு முன்பு தோனியை சிஎஸ்கே அணி விடுவிக்க வேண்டும் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
மும்முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த வருட ஐபிஎல் போட்டியில் பிளேஆஃப்-புக்குத் தகுதிபெறாமல் வெளியேறியது. கடந்த வருடம் வரை கலந்துகொண்ட அனைத்து ஐபிஎல் போட்டிகளிலும் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்ற சிஎஸ்கே அணி முதல்முறையாக இந்த நிலையை அடைந்துள்ளது. விளையாடிய 14 ஆட்டங்களில் 6-ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 6-ம் இடத்தைப் பிடித்தது.
இந்நிலையில் 2021 ஐபிஎல் போட்டிக்கு முன்பு பெரிய ஏலம் நடைபெறவுள்ளது. இதில் ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக ஐந்து வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். ஆனால், ஏலத்துக்கு முன்பு தோனியை விடுவிக்க வேண்டும் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா யோசனை கூறியுள்ளார். ஃபேஸ்புக்கில் வெளியிட்ட விடியோவில் அவர் கூறியதாவது:
பெரிய ஐபிஎல் ஏலத்துக்கு முன்பு தோனியை சிஎஸ்கே அணி விடுவிக்க வேண்டும் என எண்ணுகிறேன். பெரிய ஏலம் நடைபெற்றால் அந்த வீரருடன் நீங்கள் மூன்று வருடங்கள் இணைந்திருக்க வேண்டும். ஆனால் தோனி உங்களுடன் இணைந்து மூன்று வருடங்கள் பயணம் செய்வாரா? தோனியைத் தக்கவைக்க வேண்டாம் என நான் சொல்லவில்லை. ஆனால் அவரைத் தக்கவைத்துக்கொண்டால் நீங்கள் ரூ. 15 கோடி தர வேண்டும்.
தோனி உங்களுடன் இணைந்து மூன்று வருடங்கள் பயணிக்காமல், 2021 ஐபிஎல் போட்டியில் மட்டும் விளையாடினால் 2022-ல் உங்களுக்கு ரூ. 15 கோடி திரும்பக் கிடைத்துவிடும். ஆனால் அதன் மதிப்புக்கேற்ற வீரரை எப்படித் தேர்வு செய்யப் போகிறீர்கள்? பெரிய ஏலத்தின் மகிமையே அதுதான். உங்களிடம் அதிகப் பணம் இருந்தால் பெரிய அணியை உருவாக்க முடியும். பெரிய ஏலத்துக்கு முன்பு தோனியை விடுவித்து, பிறகு அவரை ஏலத்தில் ரைட் டு மேட்ச் கார்டில் தேர்வு செய்து கொள்ளலாம். உங்களிடம் போதிய பணம் இருந்தால் சரியான வீரர்களை ஏலத்தில் தேர்வு செய்ய முடியும் என்று கூறியுள்ளார்.
கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை