#drone #funny #catgif #broken #lost #hilarious #good #red #blue #nono #why #yes #yesyes #aliens #green
#broken #lost #good #red #funny #hilarious #catgif #blue #nono #why #yes #yesyes #aliens #green #drone
மக்கள் பாதை இயக்கத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து நாகல் சாமி நீக்கம். புதிய தலைவராக திரு.நாசர் நியமனம்.
பிஹாரில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆளுநர் மாளிகைக்கு படையெடுத்த விவசாயிகள்
''அரசியல் களத்தில் இருந்து விலகி விட்டேன்; நான் போகிறேன்; வரமாட்டேன்'' - தமிழருவி மணியன் அறிவிப்பு
டிரைவர் இல்லாமல் இயங்கும் ரயில் சேவை -கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
"மனஉளைச்சலில் இளையராஜா" : பிரசாத் ஸ்டூடியோ வருகை ரத்து!
முதல்வர்-முருகன் இன்று சந்திப்பு: முதல்வர் வேட்பாளர் குறித்து ஆலோசனையா?
அம்மா உணவகம் பாணியில் டெல்லியில் ரூ.1-க்கு உணவு: பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் தொடக்கம்
வேளாண் சட்டத்தில் எந்தக் காலத்திலும் துளி அளவு கூட மாற்றம் செய்ய மத்திய அரசு முன்வராது - அண்ணாமலை
சுப.வீரபாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதி!
அடிக்கிற அடியில் விஜய்-க்கும்.. சீமானின் பேச்சால் ரசிகர்கள் கொந்தளிப்பு.. குவியும் போஸ்டர்கள் !
சென்னை:
நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களை வீடியோ வெளியிட்டு விமர்சித்த வழக்கில் முன்னாள் நீதிபதி கர்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பற்றி ஆபாசமாக விமர்சித்து வீடியோ வெளியிட்டார். பெண் நீதிபதிகள், பெண் வழக்கறிஞர்களுக்கு எதிராகவும், ஆபாசமாக விமர்சித்து பதிவேற்றம் செய்துள்ளார்.
அவர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இதுதொடர்பாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் செயலர், ராஜகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வில், விசாரணைக்கு வந்தது.
அவர்களிடம் நீதிபதிகள், 'முக நுாலில் அவதுாறாக பதிவிட்டால், கைது செய்கிறீர்கள். சட்டம் அனைவருக்கும் பொதுவானது. இப்போது நீதித்துறை பற்றி பதிவிடப்பட்டுள்ளது. நாளை வேறு யார் பற்றியும் பதிவிட்டால் என்ன செய்வீர்கள்' என, கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, மறு உத்தரவு வரும் வரை, சமூக வலைதளங்களில் உள்ள கர்ணன் பேச்சுக்கள் அடங்கிய பதிவுகளை முடக்க, நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில், நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களை வீடியோ வெளியிட்டு விமர்சித்த வழக்கில் சென்னை ஆவடியில் ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் மத்திய குற்றப்பரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை